குஜராத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு: 55 பேர் பலி

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
குஜராத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு: 55 பேர் பலி
குஜராத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு: 55 பேர் பலி

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 

குஜராத் மாநிலத்தில் சமீப காலமாகத் தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. அதன்படி, ஒரேநாளில் 6,021 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த 3,53,516 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்று காரணமாக 55 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்தம் 4,855 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதித்த 2இ854 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து 3,17,981 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 30,680 பேர் உள்ளனர். 

நாட்டில் இதுவரை 93,50,045 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் முதற்கட்டமாக 82,37,367 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 11,12,678 பேருக்கும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com