ஏழுமலையானை 12,679 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 12,679 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 7,350 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையானை 12,679 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 12,679 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 7,350 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கரோனை தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com