கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குஜராத்தில் மேலும் 9 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 8 முக்கிய நகரங்கள் உள்பட 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவலைக் குறைக்க மேலும் 9 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஹிம்மத்நகர், பழன்பூர், நவ்சாரி, வல்சாத், போர்பந்தர், பொட்டாட், விராம்காம், சோட்டா உதய்பூர் மற்றும் வெராவல் - சோம்நாத் நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 28 முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு மே 5 வரை இருக்கும்.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இந்த நகரங்களில் தொடரும். மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள், மருத்துவக் கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் ஆகியவை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.