ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொடர்பான பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக்கொண்டு பணியில் ஈடுபடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் இருந்தபடியே அரசு அலுவல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவரது மனைவி சுனிதா கெலாட்டுக்கு நேற்று(புதன்கிழமை) கரோனா பாதிப்பு உறுதி ஆனதை அடுத்து அசோக் கெலாட்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.