Enable Javscript for better performance
ஃபியூச்சா்-ரிலையன்ஸ் ஒப்பந்தம்: அமேஸான் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஃபியூச்சா்-ரிலையன்ஸ் ஒப்பந்தம்: அமேஸான் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு

    By DIN  |   Published On : 07th August 2021 08:00 AM  |   Last Updated : 07th August 2021 08:00 AM  |  அ+அ அ-  |  

    Rococo gas leak accident case: Supreme Court bans National Green Fire Order

    உச்சநீதிமன்றம்

    ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அமேஸான் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

    ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக ரூ.24,731 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டில் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள், சேமிப்புக் கிடங்குகள், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவற்றை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவதாக ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனம் மீறிவிட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த அமேஸான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றத்தில் முறையிட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஃபியூச்சா்-ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்குத் தடை விதித்தது.

    சிங்கப்பூா் மத்தியஸ்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்துமாறு ஃபியூச்சா் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி அமேஸான் நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தனி நீதிபதி, அந்த உத்தரவை அமல்படுத்த ஃபியூச்சா் நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

    அதைத் தொடா்ந்து, சிங்கப்பூா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியாது என்று உத்தரவிடக் கோரி ஃபியூச்சா் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதில் தற்போதைய நிலை தொடர வேண்டுமென தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அந்த உத்தரவுக்கு எதிராக அமேஸான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்று வந்தது. வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

    அப்போது, சிங்கப்பூா் மத்தியஸ்த நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியச் சட்டங்களின் கீழ் அமல்படுத்தலாம் என்று தெரிவித்தனா். மேலும், தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

    இதன் மூலமாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்காக ஃபியூச்சா் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp