மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் தாக்கல்: பாஜக எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவு

பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவு
பாஜக எம்.பி.க்கள் பங்கேற்க உத்தரவு

பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் 15 நாள்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மீதமுள்ள மசோதாக்களை விரைவாக தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com