மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் தருவதாக மத்திய அரசு கூறியதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேக்கேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் தருவதாக தில்லி சென்றபோது அமைச்சர்கள் என்னிடம் கூறினார்கள்.
மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக தில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். உண்மையான நிலையையும் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும் விளக்குவேன் என்று கூறினார்.