நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு 127வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் விரேந்திர குமார் இன்று தாக்கல் செய்கிறார்.
இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) பட்டியலை தயாரிக்கும் உரிமையை மாநிலங்கள் பெற வகை செய்யும் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதையும் படிக்க | அதிமுக ஆட்சிக்கால நிதிநிலையின் வெள்ளை அறிக்கை வெளியீடு
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வார முதல் நாளான இன்று மத்திய அமைச்சர் விரேந்திர குமார் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக, எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.