இந்தியாவில் இதுவரை 56.64 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 56,64,88,433(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 20,84,79,874 இரண்டாம் தவணை - 1,73,21,864 |
45 - 59 வயது | முதல் தவணை - 12,05,14,789 இரண்டாம் தவணை - 4,73,45,647 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,24,60,190 இரண்டாம் தவணை - 4,11,85,897 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,52,028 இரண்டாம் தவணை - 81,56,910 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,82,95,288 இரண்டாம் தவணை - 1,23,75,946 |
மொத்தம் | 56,64,88,433 |