தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவித்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் 2017ஆம் முதல் தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதையும் படிக்க- கே.எல். ராகுல் அவுட்: இந்தியா உணவு இடைவேளையில் 34/1
முன்னதாக அவர் 2016ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.