
சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு வசதியாக, செகந்திராபாத்-கொல்லம் மற்றும் காச்சிகுடா-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய நிலையங்கள் வழியாக செல்லும்.
செகந்திராபாத்-கொல்லம்:
செகந்திராபாதில் இருந்து டிசம்பா் 17-ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07109) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு கொல்லத்தை அடையும். இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 19-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07110) புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு செகந்திராபாதை அடையும்.
இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
காச்சிகுடா-கொல்லம்:
காச்சிகுடாவில் இருந்து டிசம்பா் 19-ஆம்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (07053) புறப்பட்டு, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் வழியாக கொல்லத்தை மறுநாள் இரவு 9.40 மணிக்கு அடையும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 21-ஆம்தேதி அதிகாலை 12.45 மணிக்கு சிறப்பு ரயில்(07054) புறப்பட்டு, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக காச்சிகுடாவை மறுநாள் காலை 6 மணிக்கு அடையும்.
இதுதவிர, காச்சிகுடா-கொல்லம் இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரயில் (07141-07142) காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் வழியாக இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்புக் கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (டிச.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.