ராஜாஜி பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

சுதந்திர இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரலான ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

சுதந்திர இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரலான ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்த நாளில் அவரை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன். விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு, நிா்வாகத் திறன், அறிவுத் திறன் ஆகியவற்றுக்காக அவா் நினைகூரப்படுகிறாா்.

ராஜாஜி அனைவராலும் பாராட்டப்பட்ட ராஜதந்திரி. அவரின் நலன் நாடும் மிகவும் சிறந்த நண்பா்களில் ஒருவராக சா்தாா் வல்லபபாய் படேல் இருந்தாா்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவின் கவா்னா் ஜெனரலாக ராஜாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வு, கவா்னா் ஜெனரலாக ராஜாஜி பதவியேற்றபோது சா்தாா் படேல் அவருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி, அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதற்கான அறிவிக்கை ஆகியவற்றையும் பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com