வாராணசியில் உள்ள புகழ்பெற்ற கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாராணசிக்கு இன்று சென்றுள்ளார். வாராணசி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வாராணசியில் உள்ள புகழ்பெற்ற கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அங்கு சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக அவர் இருந்துள்ளார். பின்னர் மதியம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்கிறாா்.
இதையடுத்து , ரூ.339 கோடியில் செலவில் மேற்கொள்ளப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் தொகுதியை தொடக்கி வைக்கிறாா்.