லக்கீம்பூர் கெரி: "லக்கீம்பூர் கெரி வன்முறையானது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட சதி' என்று கூறியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீதான குறைந்தபட்ச குற்றச்சாட்டுகளை கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-இல் விவசாயிகளின் பேரணியில் வாகனம் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, சுமித் ஜெய்ஸ்வால், அங்கித் தாஸ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.
இதே வன்முறையில் பாஜக தரப்பிலும் சிலர் உயிரிழந்ததால், பாஜக நிர்வாகி அளித்த புகாரின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது.
இந்நிலையில், 8 பேரை பலி கொண்ட லக்கீம்பூர் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 (அலட்சியத்துடன் வாகனம் ஓட்டுதல்), 338 (அலட்சியத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல்), 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தல்) ஆகிய சட்டப் பிரிவுகளுக்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட தீவிர குற்றப் பிரிவின்கீழ், குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்தாராமிடம் சிறப்பு விசாரணைக் குழு தலைவர் வித்யாராம் திவாகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த வன்முறையானது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் விசாரணைக் குழு கூறியுள்ளது.
அதேவேளையில் 13 பேர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை), 147 (கலவரம்), 148 (கலவரம், கொடிய ஆயுதத்துடன் கூடுதல்) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் மீது எவ்வித ஆட்சேபமும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட 13 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு முதலில் 9 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைந்தது. பின்னர், உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்தக் குழுவை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சோதனை!
தவெகவில் அதிமுகவினர் இணைவது ஏன்? செங்கோட்டையன்

தமிழ்நாடு நாள்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் எச்சரித்தப் பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



