நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,447 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,447 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 391 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,76,869. நேற்று வியாழக்கிழமை 7,886 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,62,765
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 86,415 ஆக அதிகரித்துள்ளது.
இதையுடம் படிக்க | வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் டிச.31 வரை நீட்டிப்பு
நாடு முழுவதும் இதுவரை 66,15,07,694 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,59,932 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 1,35,99,96,267 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.