கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆகாஷ் அம்பானியிடம் கைமாறுகிறதா ரிலையன்ஸ் நிர்வாகம்?

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை வாரிசுகளிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். 

News image
Updated On :30 டிசம்பர் 2021, 8:43 am

DIN

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை வாரிசுகளிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். 

அதன்படி ஆகாஷ் அம்பானி நிர்வாக பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்தநாள் நேற்று( டிச.28) கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ரிலையன்ஸ் குடும்ப விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வரும் காலத்தில் உலகின் வலிமையான புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும். பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்ற இலக்குகளை அடைவதற்கும் சரியான தலைமை இருக்க வேண்டும். அதற்கு சரியான நபர்களை நியமிக்க வேண்டும். 

நான்  உள்பட மூத்த தலைமுறையினர் அனைவரும் அடுத்த தலைமுறையாக இளம் தலைமுறைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நாம் அவர்களுக்கு வழிகாட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் வளர்ச்சியுறும்போது பின்னால் இருந்து கைதட்டி பாராட்ட வேண்டும். அவர்கள் நம்மைவிட சிறப்பாக பணியாற்றலாம். அதன்படி, ரிலையன்ஸ் இப்போது ஒரு முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 

முகேஷ் -நீட்டா அம்பானி தம்பதியருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கின்றனர். 

எனினும் ஒட்டுமொத்த தலைமை மாற்றமாக முகேஷ் அம்பானியின் இடத்தில் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.