மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 15 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 50% வருகையுடன் வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் கல்லூரிகள் திறக்க புதன்கிழமை அறிவிப்பு வெளியானது.
மாநில உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் உதய் சமந்த் 50% வருகையுடன் கல்லூரிகளைத் திறக்க அனுமதியளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.