நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு தொற்று

கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,923 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு தொற்று

புதுதில்லி: கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 12,923 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12,923 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,08,71,294-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 போ் உயிரிழந்தனா்.

கடந்த 5 நாள்களாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், 108- ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,360 -ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,05,73,372 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,42,562 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

சுமாா் 3 வாரங்களாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 70,17,114 -ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 10-ஆம் தேதி வரை 20,40,23,840 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 6,99,185 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com