புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கரோனாவால் புதிதாக11,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 913-ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் கரோனாவில் இருந்து 97.33 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது. தற்போது, கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,36,549 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடர்ந்து 1.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 89,99,230 -ஆக உள்ளது.