கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கல்குவாரியில் நேரிட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, இந்த கல்குவாரியில் காவல்துறை சோதனை நடைபெறலாம் என்ற அச்சத்தில், ஜெலட்டின் குச்சிகளை தொழிலாளர்கள் அகற்றும் போது இந்த வெடிவிபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெலட்டின் குச்சிகள் வெடித்த வேகத்தில், அங்கு இருந்த தொழிலாளர்களின் உடல்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன.
இது குறித்து தாலுகா துணை ஆணையர் ஆர். லதா கூறுகையில், காவல்துறையினரின் சோதனையில் சிக்காமல் இருக்க ஜெலட்டின் குச்சிகளை அகற்றும் போது இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்காதக் காரணத்தால் சில நாள்களுக்கு முன்புதான் இந்த கல்குவாரி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்களது உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடக்கின்றன.