ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 26 ஆயிரத்து 286 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1956 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com