முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் வாகனம் பறிமுதல்

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனம் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டதாக மும்பை போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read


மும்பை: ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனம் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டதாக மும்பை போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘மும்பை, காா்மைக்கேல் சாலையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘அன்டிலியா’ அடுக்குமாடி இல்லத்துக்கு அருகே வியாழக்கிழமை மாலை வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது.

உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையிட்டனா். அதில், வெடிகுண்டாக இணைக்கப்படாத ஜெலட்டின் குச்சிகள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை குற்றப்பிரிவு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com