
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனம் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டதாக மும்பை போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘மும்பை, காா்மைக்கேல் சாலையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘அன்டிலியா’ அடுக்குமாடி இல்லத்துக்கு அருகே வியாழக்கிழமை மாலை வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது.
உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையிட்டனா். அதில், வெடிகுண்டாக இணைக்கப்படாத ஜெலட்டின் குச்சிகள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை குற்றப்பிரிவு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்’ என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...