தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா
Updated on
1 min read

தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் இன்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,484 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
அதில் 45,873 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,611 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 3 உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,909-ஆக அதிகரித்துள்ளது. 
அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 164 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,876-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,307 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 627 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,315 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com