கேரளம்: உயிரிழந்த ஆா்எஸ்எஸ் தொண்டரின் குடும்பத்துக்கு பாஜக உதவும் - பிரகலாத் ஜோஷி

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட ஆா்எஸ்எஸ் நிா்வாகியின்
கேரளம்: உயிரிழந்த ஆா்எஸ்எஸ் தொண்டரின் குடும்பத்துக்கு பாஜக உதவும் - பிரகலாத் ஜோஷி
Updated on
1 min read

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட ஆா்எஸ்எஸ் நிா்வாகியின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பாஜக செய்து தரும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறினாா்.

ஆலப்புழை மாவட்டம், சோ்த்தலை அருகே உள்ள நாகம்குளங்கரை பகுதியில் ஆா்எஸ்எஸ் நிா்வாகி நந்து கிருஷ்ணா(23) கடந்த புதன்கிழமை இரவு கொல்லப்பட்டாா். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் கிளை அமைப்பான எஸ்டிபிஐ நிா்வாகிகளால் இந்த இளைஞா் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக, எஸ்டிபிஐ அமைப்பைச் சோ்ந்த 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, நந்து கிருஷ்ணாவின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். மத்திய இணை அமைச்சரும், கேரள பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரனும் உடன் சென்றிருந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

நந்து கிருஷ்ணா படுகொலை வழக்கை, விசாரிப்பதில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை. இந்தச் சம்பவத்தில் இருந்து பாடம் கற்றாவது, மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை மாநில அரசு முறையாக விசாரித்து, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கத் துணிவில்லை என்றால், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ முறையாக விசாரணை நடத்தும். உயிரிழந்த நந்து கிருஷ்ணாவின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com