மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று (செவ்வாய்க்கிழமை) 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,74,488 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 3282 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,151 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,71,270 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் இன்னும் 51,892 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.