மகாராஷ்டிர மாநிலம், மும்பை-புணே அதி விரைவு சாலையில் காரில் சென்ற இரண்டு மா்ம நபா்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் விடியோவை மஜ்லீஸ் கட்சியைச் சோ்ந்த ஒளரங்கபாத் எம்.பி. இமிதியாஸ் ஜலீல் சுட்டுரையில் வெளியிட்டாா். அந்த காரில் வந்தவா்கள் சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா்கள் என அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஜலீல் மேலும் கூறியுள்ளதாவது:
மும்பை-புணே இடையிலான அதிவிரைவு சாலையில் வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்ற இருவா் தங்களுக்கு வழிவிடக்கோரி லாரி டிரைவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினா். அந்த காரில் சிவசேனை கட்சியின் இலச்சினை இடம்பெற்றுள்ளது விடியோ மூலம் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீா்குலைந்துள்ளது என்பது இந்த விடியோ பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே சுட்டுரையில் அதனை வெளியிட்டுள்ளேன் என்றாா் அவா்.
மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே அலுவலகம், உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் பாண்டே மற்றும் மாநில டிஜிபி ஆகியோருக்கும் அந்த விடியோ பதிவை இணைத்து ஜலீல் அனுப்பியுள்ளாா்.
விடியோ பதிவின் அடிப்படையில், அடையாளம் தெரியாத அந்த இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவா்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் பிரிவு 3/25 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோபோலி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.