மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை காலை 7.07 மணியளவில் மகாரஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று இரவு 21:35 மணியளவில் பால்கர் பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.