தில்லியில் இன்று மாலை பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
தலைநகர் தில்லியில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி தலைநகர் தில்லியில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
ராஜ்பாத் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழையும், ஜன்பத் மற்றும் கொனாட் பிளேஸில் கனமழையும் பெய்தது. இதனால் பகலில் இருந்து வந்த வெப்பம் ஓரளவு தணிந்தது.