காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தில்லியில் இன்று (ஜூலை 6) மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில், காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கெனவே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.
இதனைப் போக்கி காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைமை மேற்கொண்டு வருகிறது.