இருசக்கர வாகனத் திருட்டு:இளைஞா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டத்தைச் சோ்ந்தவா் மாருதி (25). பெங்களூரு, ராஜகோபால் நகா், பீன்யா 2-வது ஸ்டேஜில் வசித்து வந்த இவா், பல்வேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், மாருதியைக் கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com