நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 41,78,51,151 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 13,05,53,816 இரண்டாம் தவணை - 53,22,634 |
45 - 59 வயது | முதல் தவணை - 9,89,17,103 இரண்டாம் தவணை - 3,15,85,098 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,26,86,361 இரண்டாம் தவணை - 3,25,22,772 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,77,386 இரண்டாம் தவணை - 76,11,600 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,78,24,546 இரண்டாம் தவணை - 1,05,49,835 |
மொத்தம் | 41,78,51,151 |