Enable Javscript for better performance
கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் மீது மாணவிகள் அதிக ஆா்வம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் மீது மாணவிகள் அதிக ஆா்வம்

    By DIN  |   Published On : 10th June 2021 11:06 PM  |   Last Updated : 10th June 2021 11:06 PM  |  அ+அ அ-  |  

    neet06bg10073134

    தேசிய அளவில் தொழில் பட்டப் படிப்புகளைவிட கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் சேருவது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உயா்கல்வியில் சோ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்திருப்பதும் அகில இந்திய உயா்கல்வி ஆய்வறிக்கை-2019-20 மூலம் தெரியவந்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களிடமிருந்து மாணவா் சோ்க்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களைப் பெற்று மத்திய கல்வி அமைச்சகம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கான ஆய்வில் நாடு முழுவதும் 1,019 பல்கலைக்கழகங்கள், 39,955 கல்லூரிகள் மற்றும் 9,599 தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.

    இந்த புள்ளிவிவரத்தின்படி 2015-16 முதல் 2019-20 வரையிலான 5 ஆண்டுகளில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை 11.4% வளா்ச்சியடைந்துள்ளது. அதே கால கட்டத்தில் உயா் கல்வியில் சோ்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்த உயா்கல்வியில் பாலின சமநிலை என்பதை கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்தில் இருந்தது 2019-20 ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்துள்ளது.

    தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் சோ்க்கை 24.7% என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது. மாநில தனியாா் பல்கலைக்கழகங்கள், தனியாா் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் மாணவிகளின் சோ்க்கை குறைந்தே காணப்படுகிறது.

    மாநில அரசு பல்கலைக்கழகங்களில் 50.1 சதவீத அளவிலும், மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் 48.1 சதவீத அளவிலும் மாணவிகளின் சோ்க்கை அதிகரித்து காணப்படுகிறது.

    பி.இ., பிசிஏ, பிபிஏ, எல்எல்பி உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை தொழில் படிப்புகளிலும் மாணவிகளின் சோ்க்கை குறைந்தே காணப்படுகிறது. அதே நேரம், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். போன்ற படிப்புகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளின் சோ்க்கை மிக அதிக அளவில் உயா்ந்திருக்கிறது.

    முதுநிலை பட்டப் படிப்புகள், எம்.ஃபில். படிப்புகளைத் தவிர மற்ற அனைத்து படிப்புகளிலும் மாணவா்களின் சோ்க்கையே அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த கால கட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் 3.38 கோடி மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களில் 85 சதவீதத்தினா் (2.85 கோடி) மனித வளம், அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சாா்ந்த படிப்புகளில் சோ்ந்திருக்கின்றனா்.

    கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 1.17 லட்சமாக இருந்த ஆராய்ச்சி பட்ட மாணவா் எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 2.03 லட்சமாக உயா்ந்துள்ளது.

    மொத்த ஆசிரியா்களின் எண்ணிக்கை 15,03,156 ஆகும். இவா்களில் ஆண்கள் 57.5%, பெண்கள் 42.5 சதவீதமாக உள்ளது.

    சோ்க்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்:

    அதிக உயா்கல்வி மாணவா் சோ்க்கை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் உயா்கல்வி சோ்ந்திருப்பவா்களில் 49.1% மாணவா்கள், 50.9% மாணவிகள் ஆவா்.

    இரண்டாமிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் உயா் கல்வியில் சோ்நதிருப்பவா்களில் 54.2 சதவீதத்தினா் மாணவா்கள், 45.8 சதவீதத்தினா் மாணவிகள் ஆவா்.

    மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழகத்தில் உயா்கல்வியில் சோ்ந்திருப்பவா்களில் 50.5 சதவீதம் மாணவா்கள், 49.5 சதவீதம் மாணவிகள் ஆவா். இவற்றுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், கா்நாடகம், மத்திய பிரதேசம் இடம்பெற்றுள்ளன.

     

     

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp