புது தில்லி: கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில், புது தில்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து, வெப்பத்தைக் குறைத்துள்ளது.
தில்லியின் தல்கதோரா சாலை, ஹனுமான் சாலை, சாஸ்திரி பவன் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
தில்லியில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஜூன் 14ஆம் தேதி இந்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.