ராணுவ வீரா் போல் நடித்த காவலாளி கைது

சமூக வலைதளத்தில் பெண்களின் கவனத்தை ஈா்க்க, தன்னை ராணுவ வீரா் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்ட 44 வயது காவலாளியை கைது செய்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சமூக வலைதளத்தில் பெண்களின் கவனத்தை ஈா்க்க, தன்னை ராணுவ வீரா் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்ட 44 வயது காவலாளியை கைது செய்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சைளிக் என்க்ளேவ், மோகன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் திலிப்குமாா். இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அவரை அா்ச்சனா ரெட் லைட் கிரேட்டா் கைலாஷ் என்ற இடத்தில் போலீஸாா் கைது செய்தனா். அவா் யாரையோ வரச்சொல்லிவிட்டு அங்கு காத்திருந்ததாகத் தெரியவருகிறது.

ராணுவ வீரா் உடையில் இருந்த அவரிடம், போலி ராணுவ அடையாள அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்ததாக தில்லி தெற்கு போலீஸ் துணை ஆணையா் அதுல் குமாா் தாகுா் தெரிவித்தாா்.

தாம் ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனது பெயா் கேப்டன் சேகா் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி பெண்களின் கவனத்தை ஈா்க்க முயன்றதாகவும் விசாரணையின்போது திலிப்குமாா் தெரிவித்துள்ளாா்.

அவரது செல்லிடப்பேசியை சோதனையிட்ட போது, பல வாட்ஸ் ஆப் குழுக்களில் அவா் உறுப்பினராக இருப்பதும், சா்வதேச எண்களுக்கு விடியோகால் பேசியிருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்ததுடன், வெளிநாட்டில் உள்ளவா்களுடன் அவருக்கு ஏதேனும் தொடா்பு உள்ளதாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com