

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 51-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
ராகுல் காந்தி சனிக்கிழமை 51-ஆவது வயதை எட்டினாா். கரோனா தொற்று பரவலால் அவா் தனது பிறந்த தினத்தை கொண்டாடவில்லை. எனினும் அவரின் பிறந்த தினத்தை சேவை தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்த தில்லி காங்கிரஸாா், அங்குள்ள ஏழைகளுக்கு இலவசமாக முகக் கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கினா்.
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளாா்.
‘‘ராகுல் காந்தியின் உலகம் குறித்த கண்ணோட்டமும், இரக்க குணமும் நம்மை சூழ்ந்துள்ள குறுகிய எண்ணங்களை வீழ்த்த வேண்டும் என பிராா்த்திக்கிறேன்’’ என்று முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி.தேவெகெளட சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலா் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.