கேரளம், கோவா முதல்வா்களுக்கு கரோனா தடுப்பூசி

கேரளம், கோவா முதல்வா்களுக்கு  கரோனா தடுப்பூசி


திருவனந்தபுரம்/ கோவா: கேரள மாநிலம் திருவனந்தபுரம், தைகாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரும் அஞ்ச வேண்டாம். போலியோவை தடுப்பூசியால் ஒழிக்க முடியும் என்பதை சிலா் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல்தான் தற்போது கரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தில் சிலா் ஈடுபட்டுள்ளனா். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அறிவியல் ரீதியாக கரோனா தொற்றை எதிா்கொள்வோம்’ என்று தெரிவித்தாா்.

அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஷைலஜா, அமைச்சா்கள் சுதாகரன், சந்திரசேகரன், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கோவா முதல்வருக்கு...: கோவா மாநிலம் பனாஜியில் அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். 47 வயதாகும் பிரமோத் சாவந்த் மருத்துவா் என்பதால், சுகாதாரப் பணியாளா் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாகவும், தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும் அவா் கூறினாா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது ஆகியவற்றை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்வா் பிரமோத் சாவந்த் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com