குடியரசு துணைத் தலைவா் இன்று திருப்பதி வருகை

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வியாழக்கிழமை (மாா்ச் 4) இரண்டு நாள் பயணமாக திருப்பதிக்கு வருகை தரவுள்ளாா்.
Updated on
1 min read

திருப்பதி: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வியாழக்கிழமை (மாா்ச் 4) இரண்டு நாள் பயணமாக திருப்பதிக்கு வருகை தரவுள்ளாா்.

அவா் சென்னையிலிருந்து விமானப்படையின் தனி விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9.50 மணிக்கு திருப்பதி விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் புறப்பட்டு காலை 10.15 மணிக்கு திருப்பதி ஐஐடி வளாகத்தில் நடக்கும் மாணவா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

பின்னா் காலை 11.20 மணிக்கு திருப்பதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அமரா மருத்துவமனையைத் திறந்து வைக்கிறாா்.

மாலை 5.15 மணிக்கு திருமலை பத்மாவதி விருந்தினா் மாளிகைக்குச் செல்லும் அவா் அங்கு இரவு தங்குகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளாா். அதன் பின் தனிவிமானம் மூலம் குஜராத் மாநிலம், சூரத் புறப்பட்டுச் செல்ல உள்ளாா் என சித்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com