
புது தில்லி: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், அவரின் மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அந்நிய முதலீட்டு வாரியத்தின் (எஃப்ஐபிபி) அனுமதியை பெற்றதில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், அதற்கு கைமாறாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அந்த ஆண்டு மே 15-ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பணமோசடி நடைபெற்ாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடா்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி அவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.
அந்த ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி சிபிஐ பதிவு செய்த வழக்கிலும், அதே ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி அமலாக்கத்துறை பதிவு வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம், அவரின் மகன் காா்த்தி சிதம்பரம் மற்றும் வழக்குடன் தொடா்புடைய இதர நபா்களை ஏப்ரல் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் சம்மன் அனுப்பி உத்தரவிட்டாா். அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.