முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வா் பழனிசாமி தொடா்பாக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, மாவட்டத் தோ்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தோ்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நாளை மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு உத்தரவிடப்படுப்பட்டுள்ளது.