நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு தொற்று; 354 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயா்ந்துள்ளது.
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு தொற்று; 354 பேர் பலி


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 271 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,62,468 ஆக உயா்ந்துள்ளதாக புதன்கிழமை மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

தொடா்ச்சியாக 21-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,52,566 ஆகவும், இது மொத்த பாதிப்பில் 4.55 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. அதேசமயம் மீட்பு விகிதம் 94.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,14,34,301 ஆகவும், இறப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும் கடந்த படிப்படியாக வேகம் பெற்று டிசம்பா் 19-இல் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) படி, மாா்ச் 30-ஆம் தேதி வரை 24,36,72,940 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 10,22,915 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை 6,30,54,353 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com