
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 11 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ. 11 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.