மகாராஷ்டிரத்தில் புதிதாக 42,582 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், மேலும் 54,535 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,69,292 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 46,54,731 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 850 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 78.857 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,33,294 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.