மிக அதி தீவிர புயலாக குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே டவ்-தே இன்றிரவு கரையை கடக்கிறது.
இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் டவ்-தே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 155 கி.மீ. முதல் 185 கி.மீ. வரை இருக்கும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் டவ்-தே புயல் தற்போது மும்பையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.