டவ்-தே புயல் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மும்பை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவதாக மும்பை சர்வதேச விமான நிலையம் விளக்கமளித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் தொடா்ந்து வடக்கு நோக்கி நகா்ந்து வருகிறது. புயல் காரணமாக மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளன.
தற்ப்ஓது மும்பை மேற்கு - தென்மேற்கு திசையில் 160 கிலோமீட்டர் தொலைவில் டவ்-தே புயல் மையம் கொண்டுள்ளது.
குஜராத் தெற்கு - தென்கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவில் டவ்-தே புயல் நிலைக்கொண்டுள்ளது.