மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை

தமிழகம் உள்பட கரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

தமிழகம் உள்பட கரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மருத்துவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று (மே 18) மாவட்ட அதிகாரிகளுடம் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும், சவால்கள் குறித்தும் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். 

மேலும், பல மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com