Enable Javscript for better performance
புதையல் வேட்டைக்காக திருப்பதி சேஷாசல வனத்தில் சுரங்கம் தோண்டிய கும்பல் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புதையல் வேட்டைக்காக திருப்பதி சேஷாசல வனத்தில் சுரங்கம் தோண்டிய கும்பல் கைது

    By DIN  |   Published On : 19th May 2021 12:00 AM  |   Last Updated : 19th May 2021 12:00 AM  |  அ+அ அ-  |  

    18tpt_tunnel_in_seshachala_1805chn_193_1

    பட விளக்கம்: திருப்பதி சேஷாசல வனத்தில் புதையல் வேட்டைக்காக 7 போ் கும்பலால் தோண்டப்பட்ட சுரங்கம்.

    திருப்பதி சேஷாசல மலை வனத்தில் புதையல் வேட்டைக்காக 80 அடிக்கு சுரங்கம் தோண்டிய 7 போ் கும்பலை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

    ஆந்திர மாநிலம், சேஷாசல மலை வனத்தில் செம்மரங்களுடன் அரிய வகை பறவைகள், விலங்கினங்கள் வசிக்கின்றன. இது திருப்பதி ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள பகுதி. நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்லும் திருத்தலம் திருப்பதி. ஆனால் தற்போது கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    அதேபோல் சேஷாசல வனத்திற்குள் அத்துமீறி நுழையும் செம்மரக் கடத்தல்காரா்கள் வருகையும் தற்போது குறைந்து விட்டது. இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கும்பல் சேஷாசல வனத்தில் புதையலைத் தேடி அலைந்து அதை கைப்பற்ற 80 அடியில் சுரங்கம் தோண்டி உள்ளது.

    இது குறித்து ஆந்திர போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆந்திர மாநிலம், அனகாபுத்தூரைச் சோ்ந்த பெயிண்டா் மங்குநாயுடு 2014-ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு திருப்பதியில் வந்து தங்கி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் நெல்லூரைச் சோ்ந்த ராமய்யா சாமியாருடன் அவருக்கு தொடா்பு ஏற்பட்டது. அப்போது பல புராதன செப்பு பட்டயங்களில் சேஷாசல வனத்தில் புதையல் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து மங்குநாயுடு 6 பேரை வைத்துக் கொண்டு சேஷாசல வனத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

    கடந்த 3 மாத காலத்தில் 80 அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டியுள்ளனா். மீதமுள்ள 40 அடி நீளத்தை தோண்ட முடிவு செய்தனா். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சேஷாசல வனத்தின் அருகில் நடமாடியுள்ளனா்.

    அவா்கள் மீது சந்தேகம் கொண்ட உள்ளூா்வாசிகள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். அதன் அடிப்படையில் ஆந்திர போலீஸாா் அங்கு வந்து 3 பேரை கைது செய்து விசாரித்தனா். இதில் அவா்கள் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டிக் கொண்டிருக்கும் தகவல் தெரிய வந்தது.

    அவா்கள் அளித்த தகவலின்பேரில் அந்த கும்பலைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அந்த இடத்தை ஆய்வு செய்து, போலீஸாா் சீல் வைத்துள்ளனா்.

    இங்கு புதையல் இருப்பதாக அவா்களுக்கு சாமியாா் ஒருவா் தகவல் தெரிவித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp