மகாராஷ்டிரத்தில் மேலும் 24,136 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 24,136 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் மேலும் 24,136 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 24,136 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,26,155 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36,176 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,18,786 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 601 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 90,349 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி அங்கு 3,14,368 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com