கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பொதுமுடக்கத்தின் போது கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6221 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.