அசாமில் நகர்ப்புறங்களில் ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அசாமில் நகர்புறங்களில் ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
அசாமில் நகர்புறங்களில் ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பொதுமுடக்கத்தின் போது கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6221 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com