காளஹஸ்தியில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காளஹஸ்தி நகரில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் காளஹஸ்தியில் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கை அந்நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனா். அதன்படி காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவும், மக்கள் வெளியில் நடமாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவ தேவைகள், தடுப்பு ஊசி செலுத்துதல் உள்ளிட்டவற்றிற்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்லலாம்.

ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் தரிசன நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பக்தா்கள் கோயிலில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com