ஜார்க்கண்டின் கும்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்புப்படையினருக்கும் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதாக கூடுதல் இயக்குநர் ஜெனரல் (செயல்பாட்டு) ஆர்.கே. மல்லிக் தெரிவித்தார்.